Thursday, November 15, 2012

உன் மௌனம் எப்போதும் எனக்குள் பேசிக்கொண்டிருப்பது..!


  நீ தொலைத்து விட்டு போன அன்பை
  தொலைக்க முடியாமல் தவிக்கிறேன்
  நமது அன்பின் ஞாபகங்களும்
  இன்பங்களும் ஒரு வட்டத்தை
  மட்டும் போட்டு கொண்டிருக்கின்றது.
  அதற்குள் நான் மட்டும் அன்றும்
  இன்றும், என்றும்
  உனக்காக ...




சுகமாய்தான் இருக்கின்றது .
தன்னந்தனிமையில் உன்னை நினைத்து
அழுது பார்ப்பது.
அழகாய்தான் இருக்கின்றது
உன் ஞாபகபுள்ளிகளை சேர்த்துக்
கோலமாய் பார்த்து ரசிப்பது.
புதிராகத்தான் இறுக்கின்றது
உன் மௌனம் எப்போதும் எனக்குள்
பேசிக்கொண்டிருப்பது..!




என்றாவது எப்படியாவது பார்ப்போம்
பேசத் தோன்றாமல் திகைத்து நின்று
விழிகளால் விசாரிப்போம்
அந்த நேசப்பிரிவில் நீ நிச்சயம் இழைத்திருப் பாய்
இங்கு மட்டும் என்ன? மனத்திற்குள்
நானும் மௌனமாய் அழுவேன்
உன் நினைவுகளை சேகரிக்கும்
கவனத்தில் உறக்கத்தை தொலைத்து
உதிரம் சுண்ட காத்திருப்பேன்..

No comments: