Friday, March 20, 2009

எனக்கு பிடிக்கும்..


1.அதிகாலை எழுவது பிடிக்கும்..






2.இரவு நேரத்தில் தனித்து இருக்கும் நிலவுக்கு துணையாக அமர்ந்து எதயாவது கிறுக்கி கொண்டிருக்க பிடிக்கும்..




3.நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் பொறியியல் படிப்போடு வாழ்க்கை பாடத்தையும் கற்று கொடுத்து பல நல்ல உள்ளங்களை எனக்கு அறிமுகம் செய்து கொடுத்த என் கல்லூரியை AAMEC எனக்கு பிடிக்கும்..



4.சென்னையில் நான் தனிமையை உணரும் பொழுதுகளில் எல்லாம் ஆர்ப்பரித்து வந்து எனக்கு ஆறுதல் சொல்லிய(Marina Beach) அலைகளை எனக்கு பிடிக்கும்..



5.பார்க்கும் பொழுது எல்லாம் பரவசப்படுத்தி இருமாப்போடு எழுந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவில் கோபுரமும் பிடிக்கும்..




6.நானே மறந்து போன பல விசயங்களை எனக்கு அவ்வப்போது நினைவு படுத்தும் எனது டைரியை பிடிக்கும்..





7.அம்மாவின் சமையல் எல்லாமே பிடிக்கும்..

No comments: