Friday, February 29, 2008

மதுரை

இடம்: மதுரை,ஏரியூர்,சிறாவயல்
நாள் : 14-01-2005

கதையை தொடங்குவதற்கு முன் மேலே உள்ள நால்வரை பற்றியும் ஒரு அறிமுகம். முதலில் உள்ளவர் பெயர் குமார். தற்பொழுது சென்னையில் பணி புரிந்து கொண்டிருக்கின்றார். இரண்டாவது சாமிநாதன் தற்பொழுது மதுரையில் வேலையில் உள்ளார். எனக்கு அடுத்து உள்ளவர் திரு நிதியானந்தம் கோயம்பதூரில் இருக்கின்றார். நாங்கள் நால்வரும் பள்ளி நாட்களில் இருந்தே நண்பர்கள் இன்றுவரை..

அப்பொழுது நாங்கள் இரண்டாம் வருட தேர்வுகளை முடித்து விட்டு விடுமுறையில் இருந்தோம். 7 நாங்கள் விடுமுறை இருந்தது.. அப்பொழுது பொங்கல் வேற வந்தது. சாமிநாதன் விடுமுறைக்கு தான் சொந்த ஊருக்கு செல்லலாம் என்றும் அங்க சிறாவயல் ஒரு ஊரில ஜல்லிக்கட்டு நடக்கும் என்றும் நீங்களும் வறீங்க என்று சொன்னான் சரி என்று நாங்களும் ஒப்பு கொண்டு ஒரு 4, 5 காளையையாவது அடக்கணும் சொல்லிட்டு பொங்கலுக்கு முதல் நாளே புறப்பட்டோம்.

தஞ்சாவூரில் ஏறி திருப்பதூர் வந்து இறங்கினோம் பின் அங்கிருந்து ஏரியூர் செல்வதற்கான பேருந்துகாக காத்திருந்தோம் ரொம்ப நேரமா வரவே இல்லை.இங்கே இருந்து ஏரியூர் எவ்வளவு தூரம் என்று சாமிகிட்டகேட்டோம் . அவனும் நடந்து போற தூரம்தான் சொன்னான் அவன் பேச்சை நம்பி நடக்க ஆரம்பிச்சோம் . 10 நிமிடம் நடந்திருப்போம் அதுவரை வராத பேருந்து எங்களை கடந்து சென்றது. அதனால என்னனு சொல்லிட்டு

நடந்தா 45 நிமிடம் நடத்திருப்போம் கால் வலி பெண்டு எடுத்துருச்சி ஒரு வழியா வந்து சேர்ந்தோம். நடந்து வந்த களைப்பில் நல்லா சாப்பிட்டுட்டு ஒரு தூக்கத்தை போட்டோம்.

மதுரை.....2

மறுநாள் காலை 6.30 மணிக்கு மேலதான் எழுந்திரிசோம்.எழுந்ததும் சூடா காபீ வந்தது சாப்பிட்டு விட்டு அங்க இருந்த கினத்துல ஒரு குளியல போட்டுட்டு காலை உணவை முடித்தோம்.பிறகு அங்க இருந்த மலை கோவிலுக்கு போகலாம்னு முடிவு பண்ணி புறப்பட்டோம். நடந்து போற தூரத்தில் தான் இருந்தது அந்த கோவில்.




மலை மீது கட்டியிருந்தார்கள் கொஞ்ச நேரம் சுத்திட்டு அரட்டை அடிச்சிட்டு வீட்டுக்கு வந்தோம்.

மதுரை.....3

மறுநாள் காலை ஜல்லிக்கட்டு நடக்கும் இடமான ஏரியூருக்கு அந்த ஊரிலிருந்தே நிறைய டெம்போ வண்டிகள் சென்றது. நல்ல வண்டியா பார்த்து ஆளுக்கு 10 ரூபாய் டிகெட் எடுத்துக்கிட்டு ஏறினோம் ஒரு அரை மணி நேர பயணத்திற்கு பிறகு சிறாவயலை சென்றடைந்தோம். சரியான கூட்டம் நம்ம கமல் ஹாசன் நடித்த விருமாண்டி படத்துல வரமாதிரி ஏகப்பட்ட ஹீரோக்கள் அவங்களுடைய வீரத்தை காட்டினார்கள். பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது..

அவனவன் உசுர காப்பாத்திக்க அடுத்தவன் வண்டினு கூட பார்காம ஏறி உட்கார்ந்து உசுர காப்பாத்திகிட்டு இருக்குறப்பவும் நம்ம குமார் பண்ண அலும்புக்கு அளவே இல்ல.

நான் எதிரில் வர மாட்ட மட்டும் தான் ஃபோடோ எடுப்பேன்டு சொல்லி எப்படியோ மேலே உள்ள ஒரே ஒரு ஃபோடோ மட்டும் எடுத்தான்..ஒருவழியா வீட்டுக்கு வந்துசேர மணி 8 ஆகிவிட்டது.அன்று இரவே தஞ்சாவூர் கிளம்பினோம். திருப்பதூர்ல இருந்து தஞ்சாவூருக்கு 3.30 மணி நேரம் இருக்கும் அந்த கவர்ன்மெண்ட் வண்டி ட்ரைவர் வண்டிய ஓட்டின ஸ்டைல பார்த்துட்டு அவருடைய ரசிகன் ஆகிவிட்டேன் நான். அந்த டப்பா வண்டியயும் எவ்ளோ அழகா ஓட்டினார் தெரியுமா..!

No comments: