Wednesday, April 15, 2009

நினைவில் இல்லை


1.நான் முதன் முதலாய் பேசிய பேச்சு..?

2.முதன் முதலாய் எழுதிய எழுத்து..?

3.எனக்கு "அ" சொல்லிக்கொடுத்த முதல் ஆசிரியர்..?

4.உன் மதிப்பெண் குறைவிற்கு உன் வருகை குறைவு, உன் கவனக்குறைவு,நீ படிக்கும் நேரம் குறைவு,அத்துடன் நானும் ஒரு காரணம் என்று என்னை அன்பாக தொட்டு என் இதயத்திற்கு பேசிய ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை..?

5. 8-ம் வகுப்பு படித்த சமயம் எனக்கு வகுப்பெடுத்த Training டீச்சருக்கு பரிசாக நான் வாங்கி கொடுத்த வாழ்த்து அட்டை அதில் நான் கிறுக்கி கொடுத்த முதல் கவிதை ....?
டீச்சரின் பெயர் நினைவில் இல்லை...?

6. மதிய உணவு
இடைவேளையின்போது
அரண்மனை வாசலில் நாங்கள்
வரிசையாக அமர்ந்து
சப்பாட்டோடு
பாசத்தையும்
நேசத்தையும்
கேளிபேச்சுகளுடன்
வெட்டி அரட்டைகளோடும்
பகிர்ந்து உண்ட நாட்கள்
அவர்களின் முகவரிகள்
அவர்களின் பெயர்கள்..?
எதுவுமே நினைவில்லை..?

No comments: