Monday, September 27, 2010

நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..

உலகத்தின் ஈர்ப்பில் சுழலாத இதயம் கூட..
உன் அன்பின் ஈர்ப்பில் மயங்குகிறது..

காதல் என்னும் வர்ணம் பூசினேன்,
நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..
நட்பு என்னும் வர்ணம் சேர்ந்ததும்
உலகமே அழகாய் மாறிவிட்டது..



'யாரோ' என்று அறிமுகம் ஆனாய்..
ஏதோ ஏதேதோ பேசிச் சென்றாய்..
நம் உறவுக்கு பெயரிட்டாய் 'ஆத்மார்த்தமான அன்பு' என்று..
பின்வாழ்க்கை இதுவென்று புரிய வைத்தாய்..
இன்று
"என் வாழ்க்கையே நீ தான்" என்று என்னைச்
சொல்ல வைத்தாய்..

No comments: