Sunday, January 20, 2008

பிரிவும் வலியும்..!

மனசுக்கு பிடித்த ஒருவரோடு வாழ்வது என்பது ஒரு அபூர்வமான கிப்ட் மாதிரி.

ஆசை மட்டும் இருந்தால் போதாது காலமும் யதார்த்தமும் வேறு வேறு திசைகளுக்கு நம்மை இழுத்து சென்று உறவுகளை வெறும் நினைவுகலாக மட்டுமே விட்டு சென்று விடுகின்றது.


சின்ன வயதில் குடும்பம் உறவுகள்,நண்பர்கள்,கல்லூரினு சின்ன வட்டத்திற்குள் மட்டுமே இருக்கோம்.அப்படியே காதல்,கணவுன்ணு ஒவ்வோன்னா வரிசயா வரும்.காதலிக்கின்ற வயதில் நாம தேடிக்கிற சந்தோசம், நம்முடைய நண்பர்கள், நம்ம உலகம்னு எல்லாமே அழகா இருக்கும். இப்படி ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே இருந்த நமக்கு அதற்கு வெளியே வாழ்க்கை எப்படி இருக்கின்றது அதை எப்படி எதிர் கொள்வது, நமக்காண தேவையை நாமே எப்படி பூர்த்தி செய்து கொள்வது என்று கிளை விடும் கேள்விகள் ஒன்று இரண்டு அல்ல.!


நாம் வாழ்கையில் பல சந்திப்புகளும் பிரிவுகளும் தவிர்க்க முடியாதது நாம் வாழ்கையில் பெரிய சோகம் விரும்பியவர்களை பிரிவதுதான்.அப்படி பிரிந்தவர்களை நாம் நினைத்து பார்த்தால்,அவர்களிடம் பேசுவதற்கு இன்னும் வார்த்தைகள் இருக்கின்றன.காலத்தின் ஏதாவது ஒரு நாளின் நாம் அவர்களை சந்திக்க நேரலாம் இல்லை முடியாமலும் போகலாம்..!

வாழ்க்கைதான் எத்தனை நிச்சயமற்றது..!

No comments: